Skip to main content

கட்சி அலுவலகத்தின் முன் தொண்டர்கள் போராட்டம்; நெருக்கடியில் பாஜக தலைமை!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Party workers protest in front of BJP office; Leadership in crisis!

 

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்‌ஷப்பாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விருபாக்‌ஷப்பா, அரசின் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்க ரூ. 81 லட்சத்தை விருபாக்‌ஷப்பாவின் மகன் பிரஷாந்த் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்காக முதற்கட்டமாக ரூ. 40 லட்சத்தை லஞ்சமாகப் பெற்ற போது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 6 கோடி பணமும் சிக்கியது. இதைத் தொடர்ந்து விருபாக்‌ஷப்பா மற்றும் அவரது மகன் பிரஷாந்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்து லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இந்நிலையில் சன்னகிரி தொகுதி பாஜக தொண்டர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பெங்களூருவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிக்கியுள்ள விருபாக்‌ஷப்பாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் தலைமை இது குறித்து தங்களது முடிவை அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

போராட்டத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தொண்டர்களே அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவது கர்நாடக பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.