Skip to main content

அந்தக் கட்சி எக்ஸ்ட்ரா லக்கேஜ்... கூட்டணிக்குள் கருத்து பேதம்... 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

modi-stalin-sonia-prashant kishor

 

தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் கருத்து பேதம் எனத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சீன விவகாரம் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அண்மையில் கூட்டியிருந்தார். அப்போது இந்த விசயத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வின் ஆதரவு உண்டு எனத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். இதுதான் காங்கிரஸுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், சீன விவகாரத்தில் மோடி அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை வைத்துவரும் நிலையில், தி.மு.க. இந்த விசயத்தில் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். 

 

இது தொடர்பாக சோனியா அனுப்பிய தூதர் ஒருவர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். உங்கள் கட்சியின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில்தான், நீங்கள் சீன விவகாரத்தில் மோடி அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தாகக் காங்கிரஸ் கருதுகிறது என்று சொல்லியிருக்கிறார்.

 

உடனே, ஸ்டாலின், தி.மு.க. திராவிடநாடு கேட்ட காலத்திலேயே, சீன யுத்தத்தின் போது இந்திய அரசை முழுமையாக ஆதரித்தது. இந்தியாவிற்குள் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு வேறு. வெளியுறவு விவகாரங்களில் மத்திய அரசின் முடிவையே அது ஆதரிக்கும். இப்போதுகூட இந்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு தி.மு.க. தனது வணக்கத்தைச் செலுத்துதுகிறது எனச் சொல்லியிருக்கார்.

 

பிரசாந்த் கிஷோரைக் காங்கிரஸ் குறிவைக்க என்ன காரணம் என விசாரித்தபோது, அவர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக சீட் தரத் தேவையில்லை என்றும், அந்தக் கட்சி எக்ஸ்ட்ரா லக்கேஜு என்றும் தி.மு.க.வுக்கு பரிந்துரைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செய்திதான் டெல்லிவரை சென்றது எனச் சொல்கிறார்கள் கதர் சட்டையினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.