Skip to main content

திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வேட்புமனு...! ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு தாக்கல்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். 

 

parthiban


மக்களவை தேர்தலையொட்டி சேலம் தொகுதியில் திமுக சார்பில் மேட்டூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) அவரை ஆதரித்து சேலத்தில் பரப்புரை செய்தார். இதையடுத்து மதியம் 2 மணியளவில், எஸ்.ஆர்.பார்த்திபன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர். எஸ்.ஆர்.பார்த்திபன் 17 பக்கங்கள் கொண்ட சொத்துக்கணக்கு விவரங்கள் அடங்கிய படிவம்-26, தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி, மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ரூ.6 கோடிக்கு சொத்து!


அதாவது பார்த்திபன் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.72,26,834 மற்றும் அசையா சொத்துகள் ரூ.4,27,18,000 என மொத்தம் 4 கோடியே 99 லட்சத்து 44 ஆயிரத்து 834 ரூபாயும், அவருடைய மனைவியின் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.21,89,642, அசையா சொத்துகள் ரூ.77,78,300 என மொத்தம் ரூ.99,67,942 உள்ளது. மூத்த மகன் பெயரில் ரூ.12,256, இரண்டாவது மகன் பெயரில் ரூ.6,550-ம் அசையும் சொத்துகளாக உள்ளன. 


ஆக மொத்தத்தில், எஸ்.ஆர்.பார்த்திபன் தன் பெயரிலும், மனைவி, மகன்கள் பெயர்களிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகளாக ரூ.6 கோடியே 45 ஆயிரத்து 582 உள்ளதாக அபிடவிட்டில் கணக்கு காட்டியுள்ளார்.


இதில், ரூ.28.29 லட்சம் மதிப்பிலான பார்ச்சூனர் கார், ரூ.17 லட்சம் மதிப்பிலான இன்னோவா காரும் அடங்கும். அவருடைய மனைவி ரூ.4 லட்சத்தில் ஸ்விப்ட் கார் வைத்திருக்கிறார். பார்த்திபன் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று, ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான கைத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். 


வங்கி கடன்: 


பரோடா வங்கியில் பார்ச்சூனர் கார் வாங்குவதற்காக பெற்ற கடன் நிலுவை ரூ.24,62,091, தனி நபர் கடன் நிலுவை ரூ.10 லட்சமும், எல்.ஐ.சி. பாலிசி மூலம் பெற்ற கடன் ரூ.75,500 ஆகியவை செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல அவருடைய மனைவி ஹெச்டிஎப்சி வங்கியில் தனி நபர் கடனாக ரூ.4 லட்சம், எல்.ஐ.சி.யில் ரூ.36,500, மகன்  தயாநிதி எல்ஐசியில் ரூ.65,750 கடன் பெற்று செலுத்த வேண்டியுள்ளது. அதாவது பார்த்திபனுக்கு ரூ.35,37,591, அவருடைய மனைவிக்கு ரூ.4,36,500, மகனுக்கு ரூ.67,750 கடன் பொறுப்புகள் உள்ளன.


கடந்த 2018-2019 ஆண்டில் எஸ்.ஆர்.பார்த்திபன் ரூ.4,19,978, தன் மனைவி ரூ.11,42,630 என வருமானம் ஈட்டியதாக வருமான வரிக்கணக்கு விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். அதாவது, தன்னை விட தன் மனைவி கூடுதலாக வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். 


வழக்கு இல்லை:


இவர் மீது குற்ற வழக்குகள் எதும் நிலுவையில் இல்லை. இரண்டு வழக்குகள் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு நிலையில், எப்.ஐ.ஆர். போடப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.