மேலும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று தேர்தல் பிரச்சாரக் குழுவில் மு. தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி என 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் விளம்பரக் குழுவில் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேணுகோபால், பரமசிவம், இன்பதுரை, அப்துல் ரஹீம், ராஜ் சத்யன், ராஜலெட்சுமி என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். முன்னதாக திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.