Skip to main content

தொகுதி நிதி நிறுத்தம்! அதிர்ச்சியில் எம்.பி.க்கள்! 

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும் அந்த நிதியை கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டு அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. 


  Parliament of India


 

மோடி அரசின் இந்த முடிவு  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருப்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, திமுக எம்.பி. ஒருவரிடம் பேசிய போது, "வருடத்துக்கு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த நிதியை தொகுதியின் வளர்ச்சிக்காக தேவையான திட்டங்களுக்கு தொகுதி எம்.பி.க்கள் ஒதுக்குவார்கள். 

 

nakkheeran app



அந்த வகையில், ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி.க்கள் நிதி ஒதுக்கியிருப்பதால் அந்தந்த எம்.பி.க்கள் சார்ந்த கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. இதனை தடுப்பதற்காகத்தான் இப்படி ஒரு முடிவை  திடீரென எடுத்துள்ளது மத்திய அரசு. 
 

மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்வதில்  பெரும்பாலான எம்.பி.க்களுக்கு 30  சதவீத கமிஷன் கிடைக்கிறது. இப்போது  கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவால் அந்த கமிஷன் கட் ஆகிறது. இதனால் எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி" என்கிறார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Election Commission official notification regarding polling percentage

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக  தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Next Story

அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு ஆலோசனை!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
ADMK Constituency Committee Advice

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்திற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்க உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப்பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.