Skip to main content

“‘பழனிசாமி & கோ’ தங்கள் இருப்பை காண்பிக்க இந்த வேலைகளை செய்கிறார்கள்” - டிடிவி தினகரன்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

"Palanisamy and Co are doing these jobs to make their present" TTV Dhinakaran

 

அரசு எதிர்ப்பு என்பதையெல்லாம் தாண்டி பழனிசாமி தரப்பினர் தங்கள் இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காகவே சில வேலைகளைச் செய்து வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகளில் அவசர அவசரமாக அமைச்சராக்குவது ஏன் எனக் கேட்டார்கள். 

 

முதல்வர் ஸ்டாலின் எங்குச் சென்றாலும் முத்துவேல் கருணாநிதி மகன் என்கிறார். கலைஞர் முதல்வராக இருக்கும் பொழுது முதன்முதலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டாலினை அவர் அமைச்சராக்கவில்லை. 2006 இல் பலத்த விமர்சனங்களுக்குப் பிறகு தான் அமைச்சராக்கினார். தற்போது முதல்வர் உதயநிதியை அமைச்சராக்கியதன் காரணத்தைச் சொல்லவேண்டும். 

 

அதிமுக சார்பில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். அரசு எதிர்ப்பு என்பதையெல்லாம் தாண்டி பழனிசாமி கம்பெனி தங்கள் இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காக இந்த வேலைகளை எல்லாம் செய்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மீண்டும் ஒருங்கிணையுமா எனப் பழனிசாமியைத் தான் கேட்க வேண்டும். 

 

அதிமுகவில் பழனிசாமி மற்றும் அவருடன் சேர்ந்தவர்களின் சுயநலத்தால் அது ஒரு வட்டாரக் கட்சியாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவர்கள் அணியாகப் பிரிந்து செயல்படுவதன் மூலம் எம்ஜிஆர் ஆரம்பித்த அந்த இயக்கம் காணாமல் போய்விடும். தேர்தல் ஆணையத்தில்தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.