Skip to main content

“நாங்கள் ஸ்டாலினை தட்டிக் கொடுத்து செய்ய சொல்கிறோம்” - ப.சிதம்பரம்

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

P Chidambaram election campaign at puthukottai district

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு வாக்கு சேகரிக்க வடகாடு, மாங்காடு, கைகாட்டி, கீரமங்கலம், மேற்பனைக்காடு கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

 

அப்போது அவர், “எங்கள் கூட்டணியைப் பாருங்கள், சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ், மக்கள் உரிமைக்காக போராடிய திமுக, தலித் மக்களுக்காக போராடும் விசிக, பாட்டாளி மக்களுக்காக போராடும் கம்யூனிஸ்ட்கள், இந்தியா, இலங்கை மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கு எங்கே அநீதி நடந்தாலும் போராட்டக் குரல் கொடுக்கும் வைகோவின் மதிமுக போன்ற பல கட்சிகள் இணைந்துள்ளது.

 

எடப்பாடி விவசாயிதான் மறுக்கவில்லை. எடப்பாடியார் நாட்டிய அடிக்கற்களை எடுத்து ஒன்று சேர்த்தால் பெரிய கட்டிடமே கட்டலாம். அவ்வளவு அடிக்கற்கள் நாட்டியுள்ளார். மறுபடியும் டெல்லி போய் அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்தார். 20 கிமீ தூரத்தில் போராடும் விவசாயிகளை காணப் போகவில்லை. டிராக்டர் பேரணி நடத்துகிறார்கள் அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. 9 விவசாயிகள் தற்கொலை, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். 

 

பகலில் போனால்தான் மோடி கோவிப்பார், இரவிலாவது முண்டாசு கட்டிக்கிட்டு போயாவது நானும் விவசாயினு ஆறுதல் சொல்லி இருக்கலாம். விவசாயிகளை வஞ்சிக்கும் விவசாய சட்டங்களை நாங்கள் எதிர்த்தபோது ஆதரித்த ஒரே கட்சி அதிமுக. அப்பறம் எந்த முகத்தோடு விவசாயிகளிடம் ஓட்டுக் கேட்கிறார்கள். இந்தியாவில் 86% பேர் சிறு குரு விவசாயிகள்தான். பல வித்தகர்கள் இருந்த நாற்காலியில் இன்று  தலையாட்டிப் பொம்மைகளை வைத்திருக்கிறோம்.

 

இலங்கை போர்க் குற்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழர்களே இல்லாத 22 நாடுகள், தண்டிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்தியா புறக்கணித்ததால் பாரதப் பிரதமருக்கு நன்றி சொல்கிறார் இலங்கை அதிபர். 5 மணிக்கு தேர்தல் அறிவிப்பு என்பதைத் தெரிந்து கொண்டு 3 மணிக்கு அவசரமாக சுய உதவிக்குழு கடன் ரத்து, 6 பவுன் நகை கடன் ரத்து என்று  எழுதுகிறார்.  இதில் பயனடைந்தவர்கள் யார்? எவ்வளவு தொகை, எந்த வங்கி? சிறிது நேரம் இருந்திருந்தால் மளிகை கடன் ரத்து என்று கூட சொல்லி இருப்பார். கடன்களை ரத்து செய்ய எவ்வளவு வழிமுறைகள் விதிமுறைகள் உள்ளது தெரியுமா?

 

ரூ.60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து செய்த போது 3 தவணைகளாக பணம் கட்டிவிடுகிறேன் என்று ரிசர்வ் வங்கிக்கு எழுதிக் கொடுத்த பிறகே ரத்து செய்தேன். அதன் படி வங்கிக்கு ரத்து செய்த தொகையை திருப்பி கட்டினோம். தலையில் வைக்கும் "மல்லிகை பூ, ரோசாபூ வரிசையில் அறிவிப் பூ.." வையும் சேர்த்துக்கொள்ளலாம் அவ்வளவு தான்.

 

திமுகவின் வெற்றிக்கு பிறகு பிரதான 7 வாக்குறுதிகளை உங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் தட்டிக் கேளுங்கள்,  நாங்கள் ஸ்டாலினை தட்டிக் கொடுத்து செய்ய சொல்கிறோம். 3.50 லட்சம் தமிழக அரசுப்பணி காலி இடத்தை நிரப்புவோம் என்கிற வாக்குறுதியை மிகவும் வரவேற்கிறேன்” என்று பேசினார். மேலும் அவர், “எதிரணி  1977ல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக கட்சியில் வேட்பாளராக ஒரு தொண்டனும் கிடைக்கலயா? காங் கட்சியில் இருந்து ஒருத்தரை திருடனுமா? 60 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு துரோகம் செய்து மாறியவர் அடுத்த 60 நாளில் உங்களை ஏமாற்ற மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்” என்று ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் குறித்து பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.