Skip to main content

மகனை தலைவராக்க அப்பா கடும் முயற்சி ! -காங்கிரஸ் கலாட்டா !

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 

          

ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக தனது ஆதரவாளர் கே.எஸ் அழகிரியை கொண்டு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம். ஐ.என்.எக்ஸ்.மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சூழலில், அவருக்கு ஆதரவாக எந்த துரும்பையும் அழகிரி எடுத்துப் போடவில்லை. சிதம்பரத்தின் ஆதரவாளர்களை புறக்கணிக்கப்பது என்பதில் ஆரம்பித்து பல்வேறு நிலைகளில் அழகிரியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, சிதம்பரத்தின் ஆதரவாளர் என்கிற நிலையையே மறந்து போனார் அழகிரி. இதனால் சிதம்பரம் தரப்புக்கும் அழகிரிக்குமிடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. 

 

congress



           

இந்த சூழலில், சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையானார் சிதம்பரம். அப்போதிலிருந்தே, அழகிரியை மாற்ற வேண்டும் என அவரிடம் போர்க்கொடி தூக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். சிதம்பரமும் அழகிரியின் செயல்பாடுகளில் அதிர்ப்தியடைந்து வந்தார். முக்கிய விசயங்கள் எதுவும் அவரிடம் ஆலோசனை நடத்துவதில்லை சிதம்பரம். இப்படிப்பட்ட சூழலில், மத்திய மோடி அரசின் புதிய தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், மோடி அரசின் பட்ஜெட் குறித்தும் தேவக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
         

வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த பொதுக்கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைக்கப்படவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில்தான் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சிறப்புரையாற்றுகிறார்கள்.  தமிழக காங்கிரஸ் சார்பில் நடக்கும் ஒரு பொதுக்கூட்டம் மாநில தலைவர் தலைமையில் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
          

 இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘’ சிதம்பரத்திற்கும் அழகிரிக்குமான விரிசல் விரிவடைந்து கொண்டே வருகிறது. அழகிரியை மாற்றியே ஆக வேண்டும் என சிதம்பரத்திற்கு கொடுக்கப்படும் தொடர் வலியுறுத்தல்களால், தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார் சிதம்பரம். அதனால்தான், அவர் சிறப்புரையாற்றும் முக்கிய பொதுக்கூட்டத்தில் அழகிரியை அழைக்க வேண்டாம் என கே.ஆர்.ராமசாமியிடம் சொன்னதுடன், ராமசாமி தலைமையிலேயே கூட்டம் நடக்கட்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார் சிதம்பரம். அதன்படிதான் கூட்டம் நடக்கிறது. 



இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அழகிரியை தூக்கிவிட்டு  புதிய தலைவராக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிதம்பரம் ‘’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவை விமர்சித்து அறிக்கை வாசித்திருந்தார் கே.எஸ்.அழகிரி. அந்த அறிக்கை திமுக தலைமையை கோபப்படுத்தியது.  தங்களது அதிர்ப்தியை சோனியாகாந்திக்கும் அப்போது தெரிவித்தது திமுக தலைமை. இதனையடுத்து, அழகிரிக்கு கொடுக்கப்பட்ட அட்வைசின்படி, சமாதான அறிக்கை வெளியிட்டதுடன், மு.க.ஸ்டாலினை சந்தித்தும் சமாதானப்படுத்தினார் அழகிரி. ஆனாலும், அழகிரி மீது திமுகவின் கோபம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதானிருக்கிறது. அழகிரிக்கு எதிரான இப்படிப்பட்ட சூழல் இருந்து வருவதாலும், அடுத்தடுத்து தேர்தல்கள் வரவிருப்பதாலும் அழகிரியை மாற்றும் முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. இதை சரியாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் ப.சிதம்பரம், தனது மகனை தலைவராக்க பகீரத முயற்சி எடுத்துள்ளார்.
       

இதற்கிடையே, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்திருப்பதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் அப்- செட்டாகியிருப்பதால், தமிழக தலைவர் மாற்றம் குறித்து சோனியாவிடம் ஆலோசிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறார் சிதம்பரம் என்கிறார்கள் காங்கிரஸ் கதர்சட்டையினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.