Skip to main content

ஒட்டன்சத்திரம் முதல் திருவாரூர் வரை! 100 சதவிகித வெற்றி கண்ட அமைச்சர் சக்கரபாணி!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

From Ottanchatram to Thiruvarur! Minister Chakrabarty who has achieved 100 percent success!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்று திமுக கோட்டையாக்கி தக்கவைத்து வந்ததின் மூலமே முதல்வர் ஸ்டாலின், சக்கரபாணிக்கு உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவியையும் கொடுத்து இருக்கிறார் என்று திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் பேசிக்கொள்கின்றனர்.

 

ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற பகுதிகளை பிரித்து கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டமாக அறிவித்திருப்பதின் மூலம் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சக்கரபாணி இருந்து வருகிறார். அதுபோல் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவதால் அவருடைய நத்தம் சட்டமன்ற தொகுதி கிழக்கு மாவட்டத்தில் இருக்கிறது. அதேபோல் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் சீனிவாசனின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இப்படி இரண்டு முன்னாள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் சக்கரபாணி ஒவ்வொரு பகுதியாக சென்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்ததுடன் மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களையும், சலுகைகளையும் வாக்காள மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை தக்க வைத்திருக்கிறார்.

 

From Ottanchatram to Thiruvarur! Minister Chakrabarty who has achieved 100 percent success!

 

இது சம்பந்தமாக மேற்கு மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்ட போது, “எங்க அமைச்சர் தொகுதியான ஒட்டன்சத்திரம் நகர்மன்றத்தலைவர் பதவியை கடந்த முறை அ.தி.மு.க. கைப்பற்றியிருந்தது. ஆனால், இந்த முறை நகரில் உள்ள 18 வார்டுகள் தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றி நகர்மன்றத்தலைவராக திருமலைசாமியையும் நகர்மன்றத் துணைத்தலைவராக வெள்ளைசாமியையும் அமைச்சர் நியமித்திருக்கிறார். இந்த அளவுக்கு நகரத்திலேயே அதிமுக படுதோல்வி அடைந்து ஒரு வார்டை கூட கைப்பற்ற முடியாமல் டெப்பாசிட்டையும் இழந்துவிட்டது. அதேபோல் கீரனூர் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளையும் திமுக கைப்பற்றி அதன் தலைவராக கருப்புசாமியை அமைச்சர் நியமித்து 100 சதவீத வெற்றியை கொடுத்திருக்கிறார். இதேபோல் அதிமுக கோட்டையாக இருந்த வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள எரியோடு, வேடசந்தூர், அய்யலூர், வடமதுரை, பாளையம் ஆகிய ஐந்து பேரூராட்சிகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐந்து பேரூராட்சிகளை திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றி இருக்கிறது. அதன்மூலம் வேடசந்தூர் பேரூராட்சி தலைவராக மேகலா, அய்யலூர் பேரூராட்சி தலைவராக கருப்பணன், வடமதுரை நிரூபாராணி, பாளையம் பழனிச்சாமி, எரியோடு முத்துலட்சுமி ஆகிய ஐந்து பேர் ஆளுங்கட்சி தலைவர்களாக உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதிமுக ஒரு சில வார்டுகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதில் அய்யலூர் பேரூராட்சி உருவான காலத்திலிருந்தே அதிமுக கோட்டையாக இருந்த அய்யலூர் பேரூராட்சியை தி.மு.க. கோட்டையாக அமைச்சர் சக்கரபாணி உருவாக்கி இருக்கிறார். அந்த அளவுக்கு ஏற்கனவே வேடசந்தூர் தொகுதியில் திமுக கைப்பற்றி அதன் சட்டமன்ற உறுப்பினராக காந்திராஜன் இருந்து வரும் நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் ஒட்டுமொத்த பேரூராட்சிகளையும் ஆளுங்கட்சி கைப்பற்றி இருப்பதை கண்டு முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சீனிவாசனை கொஞ்சம் அதிர்ந்து இருக்கிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொகுதியான நத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நத்தம் பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளில் 4-வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியதே தவிர 14 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி அதன்மூலம் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவராக சிக்கந்தர் பாட்சா தலைவராக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சக்கரபாணி அந்த அளவுக்கு அதிமுக கோட்டையான நத்தம் பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியிருக்கிறது. இப்படி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியையும் திமுக கோட்டையாக அமைச்சர் சக்கரபாணி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதுபோல் நகர்மன்றதலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் வெற்றி பெற்று பதவியேற்ற உடனேயே ஒவ்வொரு பகுதிக்கு சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கும் அளவுக்கு உங்கள் பணி சிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்” என்று கூறினார்கள். 

 

From Ottanchatram to Thiruvarur! Minister Chakrabarty who has achieved 100 percent success!

 

அதுபோல் முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக இருந்து வரும் சக்கரபாணி அந்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்த நல்லூர் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி ஆகிய நான்கு நகராட்சிகளையும் தி.மு.க கோட்டையாக உருவாக்கி இருக்கிறார். அதுபோல் அங்குள்ள கரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், நன்னிலம், பேரளம், நீடமங்கலம், முத்துப்பேட்டை ஏழு பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது அந்த அளவுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் மாவட்டத்தையும் தொடர்ந்து தி.மு.க. கோட்டையாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட மூன்று சட்டமன்ற தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளிலும், உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்து கொண்டு திருவாரூர் மாவட்டத்திலயும் தேர்தல் பணிகளை செய்து அதன்மூலம் 100 சதவிகிதம் வரை வெற்றி வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்து முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டையும் பெற்றுள்ளார் உணவுத்துறை  அமைச்சர் சக்கரபாணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.