Skip to main content

ஆட்சியாளர்களின் பித்தலாட்டம்! வெளிமாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

ggg


இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. கால்நடையாகத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களை நோக்கி கூட்டம் கூட்டமாக நடக்கத்துவங்கினர். இந்த அவலம் பல அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஆட்சியாளர்களின் நிர்வாக லட்சனத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. 

இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளைத் துவங்குவதாக அறிவித்த மத்திய அரசு, பயணக் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லியது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, "வெளி மாநிலத் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும்" என அறிவித்தார். 
 

இந்தியா முழுவதும் காங்கிரஸ் மீதும் சோனியா மீதும் இது நல்ல இமேஜை உருவாக்கிய நிலையில், சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு, "வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்குரிய பயணக் கட்டணத்தில் 85% மத்திய அரசும், 15% மாநில அரசும் ஏற்கும்" என அவசரம் அவசரமாக அறிவித்தது.  
 

தமிழக அரசும் இதனை ஏற்றுக்கொண்டது. உடனே, பயணத்திற்குரிய டோக்கனைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளுங்கள் எனவும், அதற்குரிய செயலியையும் அறிவித்தது. அதன்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்தனர். ஓரிரு நாள் மட்டுமே அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள், தற்போது கைவிட்டுவிட்டனர். 
 

இது குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்த நிலையில், அது பற்றி நாம் விசாரித்த போது, "சென்னையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பதிவு செய்திருக்கிறார்கள். நான்கு நாட்கள் ஆகியும் அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை தமிழக அரசு. இதற்கு மாறாக, சென்னையில் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியிலுள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. 
 

bbbb


அதன்படி, எந்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்தார்களோ அந்த நிறுவனமே தனியார் பேருந்துகளை ஏற்பாடு செய்து வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க வேண்டும். அதற்குரிய செலவுகளைச் சம்மந்தப்பட்ட நிறுவனமே ஏற்க வேண்டும் எனக் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தினரை வலியுறுத்தியுள்ளனர். இதனால் நிறுவனத்தினரும் தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல்துறை மூலம் தமிழக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை தொழிலாளர்களிடம் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்பது பித்தலாட்டத் தனம்! என்கிறார்கள் தன்னார்வத் தொண்டு அமைப்பினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.