Skip to main content

புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை 144 தடை! வெளிமாநில வாகனங்களுக்கு தடை - நாராயணசாமி அறிவிப்பு! 

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

 

கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாரத பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவையொட்டி புதுச்சேரியில் முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. புதுச்சேரியின் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
 

இந்நிலையில் கரோனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணி அளவில் கைதட்டி நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.

 

அதன்படி முதல் அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டின் பால்கனிக்கு வந்து கைத்தட்டி நன்றி தெரிவித்தார். இதேபோல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாஸ் அலுவலம் முன்பாக வெளியில் வந்து ஊழியர்கள் மற்றும் காவலர்களுடன் கைகளை தட்டியும்,  மணி அடித்தும் நன்றியை தெரிவித்தார். இதேபோல் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் மாணவர்கள் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். 
 

இதனிடையே புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும், வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார் 
 

இதுகுறித்து நாராயணசாமி விடுத்துள்ள அறிவிப்பில், "புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை முதல் வரும் 31 ம் தேதி வரை தொடரும். அண்டை மாநில அரசு மற்றும் தனியார் வாகங்னகளுக்கும் அனுமதியில்லை. மளிகை, காய்கறி போன்ற பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் உரிய ரசீது காண்பித்தால்  அனுமதிக்கப்படும். புதுச்சேரி அரசின் பேருந்துகள் உள்ளூரில் மட்டுமே இயக்கப்படும்.  வெளிமாநில பயணிகள் வராமல் தடுக்க இரு சக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களிலும்  சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வது குறித்து அரசு சில மணி நேரங்களில் அறிவிக்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.