Skip to main content

ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி தெருத் தெருவாக இரைக்கிறார்கள்! தங்க தமிழ்செல்வன் பகீர் குற்றச்சாட்டு!!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்பியும் ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் உள்ள பாஜக அரசையும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசையும் மாற்ற வேண்டும்  என்பதுதான் தற்போதைய பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நிலைப்பாடு. அதுபோல் அதிமுகவில் புதிய தலைமையை தமிழகம் எதிர்பார்க்கிறது. அது டிடிவி தினகரன் தான். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு உள்ளது.

 

Thanga Tamil Selvan



தேனியில் ஓ.பி.எஸ். குடும்பம் மன்னர் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஓ.பி.எஸ்.க்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் ஒரு சில அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெறும். அதுபோல் இடைத்தேர்தல் நடைபெறும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

 

இதற்கு முன்பு பெரம்பலூரில் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், தேனி பாராளுமன்றத் தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளுங்கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். ஆனால் எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். அதுவும் தெருத்தெருவாக ரோட்டில் பணத்தை போட்டுக் கொண்டு போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. அதை போலீசார் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம் அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. அதுபோல் பாஜக மற்றும் அதிமுக அரசுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயரும் இல்லை என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.