Advertisment

அதிமுக அலுவலகத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். (படங்கள்) 

அதிமுகபொதுக்குழுகூட்டம் இன்று காலை சென்னை அடுத்தவானகரத்தில்நடந்தது. இதில், தற்காலிக பொதுச் செயலாளராக இ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பூட்டை உடைத்து நுழைந்தார். அதன்பின் அங்கு இ.பி.எஸ்-ன் ஆதரவாளர்களும் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மேலும், அதிமுக அலுவலகத்திற்குள் பொருட்கள்சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, இ.பி.எஸ்புகைப்படங்களைகீழே போட்டு உடைத்தனர். அதன்பிறகுவருவாய்கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து ஓ.பி.எஸிடம்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓ.பி.எஸ்தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அதன் பிறகு அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து கிளம்பினார். அதன்பிறகுவருவாய்கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அதிமுக அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர்.

Advertisment

ops admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe