துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத் தேர்தலில் மொத்தமுள்ள 16 இடங்களில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றன. அ.ம.மு.க.வை சேர்ந்த மருதையம்மாளை அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ். முயற்சி செய்த நிலையில், தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா மருதையம்மாளுக்கு துணைத்தலைவர் பதவி கொடுப்பதாக பேசி தி.மு.க.வுக்கு ஒன்றியத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதைப்போலவே, ஆண்டிப்பட்டி தொகுதியை தி.மு.க. கைப்பற்றிய நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட கடமலைமயிலை ஒன்றியத் தலைவர் பதவிக்கும் தி.மு.க., அ.தி.மு.க. இடையே பலத்த போட்டி உருவாகி இருக்கிறது. அங்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணனோ, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜனோ கண்டு கொள்ளவில்லை என்பதே தி.மு.க.வினரின் கவலை.