Skip to main content

நான் மட்டும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கணும்? எடப்பாடியால் அப்செட்டான ஓபிஎஸ்... கோபத்தில் ஓபிஎஸ் தரப்பு! 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், சபாநாயகரே ஒரு முடிவை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சபாநாயகர் ஒரு பிரச்சினையில் ஒரு தீர்ப்பை கூறி, அதில் திருப்தி இல்லையென்றால் அதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம். அதேசமயம், சபாநாயகர் ஒரு விவகாரத்தில் ஒரு முடிவையே எடுக்காத நிலையில், அதுபற்றி அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று யாரும் நீதி மன்றத்தில் முறையிட முடியாது என்று நக்கீரனில் ஏற்கனவே கூறியிருந்தோம். இதைத்தான் தற்போது உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த வழக்கைத் தொடுத்த தி.மு.க. தரப்புக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். 

 

admk



இந்தத் தீர்ப்பின் மூலம் அதிமுகவிற்கு ஏற்பட்ட சிக்கலில் முதல்வர் எடப்பாடி தரப்பு தப்பி விட்டதாக உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் ஆட்சிக் காலத்தையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆட்சி நடத்தி விடலாம் என்று எடப்பாடி நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இத்தனை நாளாக இந்த வழக்கால் பதவி குறித்து அச்சத்தில் இருந்த ஓ.பி.எஸ். தரப்பும், தற்போது தீர்ப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் அந்த தீர்ப்பால் எடப்பாடி மீதான விமர்சனத்தையும் கொண்டு வர வைத்துள்ளது என்கின்றனர். பள்ளிகளில் காலை நேர சத்துணவு வழங்குவது போன்ற முக்கியமான அறிவிப்பை எல்லாம், முதல்வர் எடப்பாடியே 110 விதியின் படி தனியாக அறிவிப்பதாக சொல்கின்றனர். அதே சமயம் தனது 10 ஆவது பட்ஜெட்டை ஓ.பி.எஸ். சமர்ப்பிக்கும் போது மட்டும், அதில் எந்த சிறப்பான திட்டமும் இல்லாத பட்ஜெட்டாக அதை தாக்கல் பண்ண வைக்கிறார் எடப்பாடி என்றும் கூறிவருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டை படித்துவிட்டு நாம் மட்டும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கணுமான்னு? ஓ.பி.எஸ். தன் சகாக்களிடம் வருத்தப்படுவதாக சொல்கின்றனர். 


மேலும் ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த 11 பேரில் ஓ.பி.எஸ்.சுக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் மட்டும்தான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக மற்ற ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை எடுத்துக்கூறி மற்றவர்களுக்கும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வைத்திருந்தார். இப்போது இந்த வழக்கில் ரூட் கிளியர் ஆனதால் அவங்களும் மந்திரி பதவிக்கு போட்டி போட்டு கொண்டுள்ளனர். அதோடு, அமைச்சரவையில் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 31 ஆக இருக்கிறது. இதை அதிகபட்சம் 34 வரை ஆக்கமுடியும் என்பதால், மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளைத் தங்கள் தரப்புக்குக் கொடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எடப்பாடியிடம் இது குறித்து பேசுங்கள் என்று ஓ.பி. எஸ்.சுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.