Skip to main content

“அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்த ஓ.பி.எஸ், தினகரன்..!” - திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

"OPS, Dinakaran who wanted to overthrow the AIADMK ..!" MK Stalin


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்னும் நான்கு மாதத்தில் பழனிசாமியின் ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்ற முடிவோடுதான் வந்துள்ளீர்கள். நான் ரெடி, நீங்க ரெடியா” என பேசினார். மேலும், “வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நம்பிக்கை இந்தக் கூட்டத்தைப் பார்த்தவுடன் பிறந்துள்ளது. 

 

திருவெறும்பூரில் பேசிய முதல்வரை, எடப்பாடி என சொல்ல மாட்டேன். அந்த ஊரைச் சொல்லி, பேரைச் சொன்னால் எங்களுக்கு கேவலமாக உள்ளது என ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதால் பழனிசாமி என்றே அழைப்பேன். தமிழக முதல்வர் பிரச்சாரத்தில், நேரடியாக ஓட்டுப் போட்டு எந்த முதல்வரும் தேர்வு செய்ய முடியாது என பேசியுள்ளார். யாருமே நேரடியாக முதல்வராக முடியாது. ஆனால், பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பது அவருக்கே தெரியும். 

 

தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைக்கவில்லை. கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வர நாங்கள் விரும்பவில்லை. மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரவே முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்தது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும்தான்; நாங்கள் அல்ல. 2005ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து கிடப்பில் போடப்பட்டது. மோடி அடிக்கல் நாட்டிய பிறகும் கிடப்பில்தான் உள்ளது. எய்ம்ஸ் வரவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என அ.தி.மு.க. அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் வரவில்லை; ராஜினாமா செய்தாரா? உதயக்குமார், ராஜினாமா செய்யத் தேவையில்லை. வரும் தேர்தலில் அவர், வீட்டுக்கு அனுப்பப்படுவார்” என்று பேசினார். 

 

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலை திட்டமாக மாற்ற வேண்டும் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “கால்வாய் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும். 100 நாள் வேலை திட்டத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுமென அறிவித்தவுடன், ஆளும் கட்சி அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது” என்றார்.

 

மேலும், “10 ஆண்டுகளாக ஜெயலலிதா ஆட்சியிலும், அதன் பின் பழனிச்சாமி பதவியேற்ற பின்பும் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. திருமங்கலம் புதிய பேருந்து நிலையம், இரயில்வே மேம்பாலம், திருமங்கலம் பிரதான கால்வாய், மதுரை துணைக்கோள் நகரம் என எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை. இந்த தொகுதியின் அமைச்சர், ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார். ஆனால், ஜெயலலிதா எப்படி மரணமடைந்தார் என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பியது துணை முதல்வர்தான்; தி.மு.க. அல்ல.

 

ஜெயலலிதாவுக்கும் தி.மு.க.வுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், மருத்துவமனையில் இருந்தபோது சரியான தகவல் வெளியிடவில்லை. விசாரனை கமிஷன் 8 முறை அழைத்தும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் செல்லவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உண்மை நிலவரம் தி.மு.க. ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்படும். கரோனா காலத்தில்கூட கொள்ளை அடிக்கக் கூடிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. இந்த அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிப்போம்” என பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது