Skip to main content

தகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்! டென்ஷனான எடப்பாடி!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்க 3 ஆயிரம் மி.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கு. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் போதுமான உதவிகள் போய்ச் சேரலைனு சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கே விசிட் அடிச்சும் கூட அரசுத் தரப்பில் இருந்து போதுமான உதவிகள் இன்னும் முழுசா கிடைக்கலைன்னு வீடிழந்தும் உடைமைகள் இழந்தும் தவிக்கும் மக்கள் குமுறுறாங்க.

 

admk



நீலகிரிக்குப் போய் நேரில் பார்வையிட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்படும்ன்னு அறிவிச்சிருக்கார். நீலகிரி எம்.பி.யான ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கிய 3 கோடி ரூபாயும் இதில் அடக்கம். இருந்தும், ஆ.ராசாவை நோக்கியும் மக்கள் கேள்வி கேட்குறாங்க. அந்தளவுக்கு பாதிப்பு இருக்கு. நீலகிரியே ஒட்டுமொத்தமா நிலைகுலைஞ்சு போயிருக்கும் நிலையிலும், அங்கே முதல்வர் எடப்பாடி உடனடியா போகலைங்கிற கோபம் மக்கள்கிட்ட இருக்கு. இதைத் தெரிஞ்சுகிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்குத் தகவல் தராமலேயே நீலகிரிக்குப் போனார். நிவாரண உதவிகளை வழங்கிய அவர், கிட்டத்தட்ட ஒரு முதல்வர் ரேஞ்சில் செயல்பட்டிருக்காரு. 

மாவட்ட நிர்வாகத்தினரையும் வருவாய்த் துறையினரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்ட ஓ.பி. எஸ்., சேதத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்ன்னு கேட்டிருக்கார். அதிகாரிகளோ குறைந்தபட்சம் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. இப்ப நிலச்சரிவையும் சேதமான சாலைகளையும் சரிபண்ணவே 200 கோடி ரூபாய் இருந்தாத்தான் சமாளிக்க முடியும்ன்னு சொல்லியிருக்காங்க. உடனே இதுகுறித்து முயற்சிப்பதாகச் சொல்லிவிட்டு ஓ.பி.எஸ். அங்கிருந்து கிளம்பியிருக்கார். இந்தத் தகவல் தெரிஞ்சதும் டென்ஷனான எடப்பாடி, இப்பவே ஓ.பி.எஸ். இப்படின்னா, நான் 28-ந் தேதி வெளிநாடு போன பிறகு, என்னவெல்லாம் செய்வாருன்னு தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் புலம்பி வருவதாக கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்