அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின்பெரும்பாலமானமாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர்பரஞ்ஜோதிசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டச் செயலாளர்கள். இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களது ஆதரவு அலை எடப்பாடி பழனிச்சாமிக்கு வீசுகிறது. அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்திலும் அது எதிரொலித்தது.
ஓபிஎஸ்பொதுக்குழுகூட்டத்தை நிறுத்த டி.ஜி.பிக்கு கடிதம் எழுதினார். அதேபோல்பொதுக்குழுகூட்டம் நடைபெற்ற திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதினார்.இப்படிதொடர்ந்து கடிதம் எழுதிபொதுக்கூட்டத்தைதடை செய்ய நினைத்தார். அவர் சசிகலா,டிடிவிதினகரன்ஆகியோரைநம்பிகட்சியைக்கொண்டு செல்ல திட்டமிடுகிறார். எனவே அவரின் ஆசை ஒரு போதும் நிறைவேறாது” என்று தெரிவித்தார்.