Advertisment

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் வந்த ஓ.பி.எஸ்... பரபரப்பில் அதிமுகவினர்

Advertisment

அதிமுகவில் தலைமை பிரச்சனை நீடித்துவரும் நிலையில், இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தை மாறி மாறி நாடிவருகின்றனர். இந்நிலையில் நேற்று, ஓ.பி.எஸ். திடீரென அதிமுகவின் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றார். மேலும், “பொறுத்திருந்து பாருங்கள் எல்லாம் நன்மையாக முடியும். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வோம்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்திற்கு மலர் தூவி ஓ.பி.எஸ். மரியாதை செய்தார். அப்போது ஓ.பி.எஸ். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் வருகைத் தந்திருந்தார். இருவரும் இணைந்து அண்ணாவுக்கு அங்கு மரியாதை செய்தனர். நேற்றையச் சந்திப்பு, செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து இன்று ஓ.பி.எஸ். உடன் பண்ருட்டி ராமச்சந்திரன் வந்தது அதிமுக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

admk ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe