Skip to main content

ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவுக்கு கரோனா! தொற்று பரவியது எப்படி?

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
o raja

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ்-ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதைக்கண்டு சுகாதாரத்துறையினர் நகரிலுள்ள பல பகுதிகளுக்கு சீல் வைத்தும், ஊரடங்கு உத்தரவும் கடுமையாகக் கடைப்பிடித்தும் வருகிறார்கள். அதனாலேயே துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி வந்தும் கூட கரோனா பீதியால் பெரியகுளம் செல்லாமல் போடியில் வீடு எடுத்து தங்கினார். 

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா தேனி மாவட்ட ஆவின் தலைவராக இருந்து வருகிறார். அவருடைய  வீடும் ஓபிஎஸ் பழைய வீடு அருகிலேயே இருக்கிறது. இந்த நிலையில் பெரியகுளத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கண்டு சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வந்தனர். அதுபோல் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜாவுக்கும் சுகாதாரத் துறையை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் நான்குமுறை தொடர் பரிசோதனை செய்தும்கூட கரோனா தொற்று இல்லை என (NEGATIVE) வந்தது. இருந்தாலும் பெரியகுளம் நகர் பகுதியில் கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை கண்ட ஓ.ராஜா இனிமேல் இங்கே இருக்கக்கூடாது என மாமனார் ஊரான போடி அருகே இருக்கும் போடேந்திரபுரத்திற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்துடன் போய் தங்கியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் நேற்று சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்தனர். அப்போது சுகாதாரத் துறையினர் ஓ. ராஜா வீட்டுக்கும் சென்று கரோனா பரிசோதனை செய்தபோது ஓ.ராஜாவுக்கு கரோனா (POSITIVE) இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைக்கண்டு ஓ.ராஜா அதிர்ச்சி அடைந்துவிட்டார். உடனே ஓ.ராஜாவை மதுரைக்கு அழைத்துச் சென்று, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதின் மூலம் ஓ. ராஜாவுக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அதே மருத்துவமனையில் ஓ. ராஜாவின் மனைவியும் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே போடேந்திரம்புரம் முழுவதும் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி அடித்து ஓ. ராஜாவுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.