ops

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

வரும் டிசம்பர் 18ஆம் தேதி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதேபோல் டிசம்பர் 20ஆம் தேதி ஆஜராகுமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல டிசம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment