Skip to main content

மகனை வைத்து அதிமுகவில் அரசியல் செய்யும் ஓபிஎஸ்! கடுப்பில் எடப்பாடி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அரசு ஆட்சி அமைத்த உடன் அமைச்சரவையில் தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்று ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டார். பின்பு கட்சியில் சீனியரான வைத்தியலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கருதியதால் அவருக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜகவை அணுகியது. 

 

ops



ஆனால் அதிமுகவில் அமைச்சர் பதவியால் நடக்கும் உட்கட்சி பூசலால் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க பாஜக முன்வரவில்லை. இதனையடுத்து முத்தலாக் மசோதாவை ஆதரித்து ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் வேலூரில் நடக்கும் தேர்தலில் அதிமுகவிற்கு முஸ்லீம் வாக்குகள் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரவீந்திரநாத் குமார் தெரிவித்த ஆதரவிற்கு பின்னால் ஒபிஎஸ்ஸின் அரசியல் திட்டம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற பன்னீர் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தார். அப்போது தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கோருவது பற்றித்தான் பேசியிருக்கிறார். அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டும் அமைச்சராக வேண்டும். 


அப்போது தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிந்தாலும் அரசியலில் தனக்கென்று ஒரு இடம் கிடைக்கும் என்று ஓபிஎஸ் திட்டம் போடுவதாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கட்சியில் இருக்கும் சீனியர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டில் ஆதரவாக இருக்கவில்லை என்ற பேச்சும் அதிமுகவில் நிலவி வருகிறது. மேலும் தற்போது வேலூர் தேர்தல் நெருங்கிய நிலையில், நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் என்று நாடாளுமன்ற மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேசியிருப்பது குறிப்படத்தக்கது. அதே போல் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலையிட கூடாது என்றும் பேசியுள்ளார்.     

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.