![OPS to adjourn case related to General Assembly Request](http://image.nakkheeran.in/cdn/farfuture/blpVbuwyY61zmO7TUyxyTVJ4RHbptzm0nCNudiu-g8Q/1701079996/sites/default/files/inline-images/ops-eps_44.jpg)
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஒத்திவைக்க ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழலில் தனிப்பட்ட காரணங்களால் வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது. பிற வழக்குகளை தாமதம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கை மேற்கோள் காட்டி கீழ் நீதிமன்ற வழக்குகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.