Skip to main content

எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போட்டா போட்டி  போராட்டங்கள்

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

மத்திய அரசு சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு வழங்கிய அரிசி மற்றும் பருப்பை வழங்காததைக் கண்டித்தும், மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு மாநில அரசின் நிதியில் இருந்து அரிசி வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (16.04.2020)  சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

Puducherry



இப்போராட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், பாஜக எம்.எல்.ஏ சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Puducherry


முதலில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகப் படிக்கட்டு மற்றும் வராண்டாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் பின்னர் சட்டசபை நுழைவு வாயில் இரும்பு கேட்டுகளைப் பூட்டி மூன்றுபேர் உள்நுழையும் வாயில் முன்பும், மூன்றுபேர் வெளியே செல்லும் வாயிலிலும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

Puducherry

 

http://onelink.to/nknapp


அப்போது அன்பழகன் "முதல்வர் நாராயணசாமி இரு தினங்களில் அரிசி அளிப்பதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 

அதேசமயம் மஞ்சள் கார்டுக்கு அரிசி வழங்க அனுமதி கோரி அமைச்சர் கந்தசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜ்நிவாஸ் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி, ஜெயமூர்த்தி ஆகியோர் சட்டசபையில் இருந்து நடந்து சென்று ஆளுனர் மாளிகை முன்பு மஞ்சள் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க தடையாக இருக்கும் ஆளுனர் கிரண்பேடியை கண்டித்தும், உடனடியாக மஞ்சள் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க அனுமதிக்கக் கோரியும் தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
 

அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களை சமரசம் செய்து போராட்டத்தை கைவிட வைத்தார். அப்போது அவர் " மக்களுக்கு அரிசி போடாததற்கு காரணம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிதான். வேண்டுமென்றே கோப்புகளைக்  கிடப்பில்போட்டு கால தாமதம் செய்கிறார்" எனக் குற்றம் சாற்றினார். 
 

இதனிடையே மஞ்சள் குடும்ப அட்டைதார்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுனர் ஒப்புதல் அளித்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதார்களுக்கும் 3 மாதத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க  ஒப்புதல் அளித்துள்ள கிரண்பேடி  'வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களைத் தவிர்த்து வழங்கலாம்' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

அதேசமயம் மஞ்சள், சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது. அரிசி வழங்கக்கோரி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.