/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/umman_3.jpg)
கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர் ஆவார்.
கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்று தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார். பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, பெங்களூருவில் இருந்து உம்மன் சாண்டி உடல் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு நடைபெற்ற உம்மன்சாண்டியின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உம்மன் சாண்டியின் உடல் புதுப்பள்ளியில் உள்ள தேவாலய கல்லறைத் தோட்டத்தில் உள்ள பாதிரியார்களுக்கான இடத்தில் உம்மன்சாண்டியின் விருப்பப்படி அரசு மரியாதையின்றி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/umman-chandy-son.jpg)
இந்நிலையில் உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொகுதிக்கு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)