Skip to main content

வெங்காய தட்டுப்பாடு... அதிமுக அரசிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்... ஈஸ்வரன் கண்டனம்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

E.R.Eswaran

 

வெங்காயத்தின் விலை ஏற்றத்திற்கு பதுக்கல் தான் காரணம். புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், வெங்காயத்தைப் போல பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு துணைபோகும் தமிழக அ.தி.மு.க அரசிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறார்கள் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 228.19 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி 268.56 லட்சம் டன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு வெங்காய உற்பத்தியை விட 17.69 சதவீதமும், சாதராண உற்பத்தியை விட 23.91 சதவீதமும் அதிகமாகும். வெங்காய உற்பத்தி இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் போது எப்படி விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏற்படும். 

 

ddd

 

ஆந்திராவில் மழை பெய்வதால் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை துளிகூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 3.65 சதவீதம் தான் ஆந்திராவில் உற்பத்தியாகிறது. இதை டன் கணக்கில் குறிப்பிட்டால் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் உற்பத்தியாகும் 268.56 லட்சம் டன் வெங்காயத்தில் 9.80 லட்சம் டன் மட்டும்தான் ஆந்திராவில் உற்பத்தியாகிறது. 

 

ggg

 

இந்தியா முழுவதும் உள்ள வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் கடந்த ஆண்டை விட அதிக உற்பத்தியே இருக்கிறது. வெங்காய உற்பத்தி அதிகமாக இருந்தும் சந்தைகளில் வெங்காய வரத்து குறைவாகவே இருக்கிறது. இதற்கு வெங்காயப் பதுக்கலே மிக முக்கியக் காரணம். இன்றைய நிலையில் வெங்காயத்தைப் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். பதுக்கல்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதுவே புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் பதுக்கலுக்கு சட்டப்படி அரசே வழிவகை செய்கிறது. பதுக்கல்காரர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

 

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்காயத்தைப் பதுக்கினால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் அமைச்சர் இப்படிப் பேச முடியுமா? அல்லது நடவடிக்கைதான் எடுக்க முடியுமா?. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளித்துவிட்டு, இப்போது பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். 

 

cnc

 

வெங்காயத்தைப் பதுக்கி, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, தற்போது விலையேற்றத்தைக் கொண்டு வந்திருப்பது, ஏழை எளிய நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிப்படைய வைத்திருக்கிறது. இதே நிலைமைதான் புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வரும்போது மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு விலை அதிகரிக்கும். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதற்கும் இதுவே உதாரணம். 

 

இதனால்தான் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கிறோம். அத்தியாவசிய உணவுத் தேவையைப் பாதிக்கும் இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மக்களிடையே பசியும், பட்டினியும் ஏற்படும். மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் தமிழக அ.தி.மு.க அரசிற்கு, மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்டாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

'Onion price that makes you cry'- Pmk Ramadoss alleges



வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

அடுத்த சில நாட்களில் தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வரவிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும், மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ. 200-ஐ தாண்டியதைப் போன்று  வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ. 150-ஐத் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்வில் இருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

 

bb

 

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாகச் சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்குக் கொண்டு வருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாடு முழுவதும்  வெங்காயத்தின்  விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெங்காயம் முழுவதையும் சந்தைக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன்,  வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்.

 

வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்குத் தாழ்வதற்குக் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான். எனவே, தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

நடவு வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Increase in price of planting onions

 

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை விண்ணைத் தொட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

 

ஏற்கனவே முந்தைய காலகட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்திருந்தது. தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்தது. திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் பரிசு வழங்கும் அளவுக்கு அன்றைய காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது.

 

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வியாபாரிகளிடம் இருந்து பழைய சின்ன வெங்காயத்தை வாங்கி நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பழைய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.