மோடி பிரச்சார கூட்டத்தில் ஓ.பி.எஸ்.ஸூம் அவரது மகனும்!!! பின்னணி என்ன???

இன்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தில் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் நிற்கும் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர்.

ops modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, தமிழ்நாட்டில் ரவீந்திரநாத்திற்கு பிரச்சாரம் செய்ய கடந்த ஏப்ரல் 13ம் தேதி தேனி வந்தார், பிரதமர் நரேந்திரமோடி. அதற்கு கைமாறாக தற்போது ஓ.பி.எஸ்.ஸூம், அவரது மகனும் சென்றுள்ளனர்.

மேலும் இதனிடைய சில முக்கிய தகவல்களை மோடியிடம் கூற ஓ.பி.எஸ். சென்றுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று சசிகலா இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். ஒருவேளை அதுகுறித்தும் பேச செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

admk Narendra Modi O Panneerselvam Ravindranath Kumar
இதையும் படியுங்கள்
Subscribe