Skip to main content

எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள்... -விஜயகாந்தை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் பேச்சு

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் கூறியது, 
 

vijayakanth O panner


அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்றோ அல்லது நாளையோ அதுகுறித்து ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டு, முதலில் உங்களுக்குத்தான் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 6ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டு, 6ம் தேதி பிரதமர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் பங்கேற்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்றோ, நாளையோ தெரியும். 

 

 

சார்ந்த செய்திகள்