Skip to main content

'நுபுர் சர்மா விவகாரம்... உச்சநீதிமன்றத்தின் கருத்து ஆறுதல் அளிக்கிறது...''- மஜகவின் தமிமுன் அன்சாரி கருத்து!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

"The Nubur Sharma issue... Supreme Court's opinion is comforting..." - Mjk's Tamimun Ansari!

 

பாஜக பிரமுகர் நுபுர் சர்மா தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ''உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்பும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'உலகம் எங்கும் போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்திப் பேசிய அவரது கருத்து, உலக அளவில் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  நாடெங்கிலும் எதிரொலித்து வருகிறது. அது சார்ந்த போராட்டங்களும் நீடித்து வருகிறது. இதனிடையே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அவரை பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், அவரது கருத்தை ஆதரித்துப் பதிவிடும் போக்கும் அதிகரித்திருக்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக யார், எதை பேசினாலும், அவர்களை பாதுகாக்க அதிகார மையம் இருக்கிறது என்ற துணிச்சல்தான் இதற்கு காரணமாகும்.

 

mjk

 

இந்நிலையில் உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவை கடும் வார்த்தைகளால் கண்டித்திருக்கிறது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்றும், நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கி விட்டார் என்றும், அதன் விளைவே உதய்பூர் படுகொலை சம்பவம் என்றும், தனது சர்ச்சை பேச்சுக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

 

இது அவருக்கு மட்டும் விடுத்துள்ள நீதித்துறையின் கண்டனமாக பார்க்கக் கூடாது. அவரை பாதுகாப்பவர்கள், அவரது கருத்தை வழிமொழிபவர்கள், மத வெறியை தூண்டுபவர்கள், ஃபாஸிஸ்ட்டுகள் என அனைவருக்குமானதாக புரிந்துகொள்ள வேண்டும்.

 

உலகம் எங்கும் இந்திய திருநாட்டின் நற்பெயருக்கும், இந்திய பொது சமூகத்தின் கண்ணியத்திற்கும்   பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும். இதன் மூலம் இதுபோன்ற பொறுப்பற்றவர்கள் மேலும் மேலும் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் தூண்டாமல் இருக்க முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதே அதன் நோக்கமாகும்.

 

கடும் சட்ட நடவடிக்கைகள் தவறும் போது, தனிநபர்களின் அராஜகங்கள் பெருகிவிடும் ஆபத்துகள் உருவாகிவிடும் அபாயம்  இருக்கிறது. நாட்டில் இணக்கமான பாரம்பரிய  சமூக அமைப்பு பாழ்பட இனியும் அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் கூறிய இன்றைய கருத்துகள் அமைதியையும், ஒற்றுமையையும்  விரும்பும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கிறது. மேலும் மக்களை இணைக்கும் பல சமூக கடமைகள் குறித்தும் நல்லெண்ணத்தோடு அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

 

முக்கியமாக, அனைத்து மதவெறி சக்திகளுக்கும் எதிராக மக்களை சித்தாந்த ரீதியாக கட்டியெழுப்பும் தார்மீக கடமையை, அனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியலைக் கடந்து முன்னெடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை  இத்தருணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முன் வைக்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.