Advertisment

நான் கைலாசா போறேன்... எனக்கு அதிபர் நித்தியானந்தா... சீமான் அதிரடி பேச்சு!

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

seeman

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. நாங்கள் இந்திய குடியுரிமையற்றவனாக்கிவிட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன். எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாகவும் உள்ளார் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். அப்போது மம்தா பானர்ஜி போல் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைவர் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment
citizenship amendment bill politics Speech ntk seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe