Skip to main content

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி; தொடர்ந்து நீடிக்கும் இழுபறி..! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

NR Congress-BJP alliance

 

2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி கடந்த வாரத்தில் கவிழ்ந்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதில், அதிமுக - பாஜக கூட்டணியில், முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, 'நமச்சிவாயம்தான் முதலமைச்சர் வேட்பாளர்' என்று சூசகமாக அறிவித்ததால், ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார். ஆனால், பா.ஜ.க மேலிடம் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேசமயம் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் சரிபாதி தொகுதிகள் வேண்டும் என்பதில் ரங்கசாமி விடாப்பிடியாக இருந்து வருகிறார். இதனால் கூட்டணி உடன்பாடு ஏற்படுவதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே இழுபறி நீடித்து வருகிறது.

 

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனியார் ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் எந்தவிதமான முடிவும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லஷ்மி நாராயணன், என்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தன்னை என்.ஆர்.காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, “பா.ஜ.க கூட்டணியில் நீடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கலந்து பேசி முடிவெடுப்போம்” என்றார்.

 

இந்நிலையில் நேற்று (03.03.2021) மாலை பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, எம்.பி. ராஜுசந்திரசேகர், நிர்மல்குமார் சுரானா மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் சாரத்தில் உள்ள அண்ணாமலை நட்சத்திர விடுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து நிர்மல்குமார் சுரானா மற்றும் ரங்கசாமி வெளியே வந்தனர். இதுகுறித்து நிர்மல்குமார் சுரானாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணியில் உள்ளதாகவும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும் கூறினார். மேலும், 'பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்' எனத் தெரிவித்தார். ஆனாலும் புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி உடன்பாடு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.