Skip to main content

“பாஜக சொன்னது பொய் என்பது தற்போது உறுதியாகியுள்ளது” - நாராயணசாமி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

"Now it is confirmed that what BJP said is a lie" Narayanasamy

 

“வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்” என புதுச்சேரி மாநில  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வதந்தியை பரப்பும் கட்சியாக பா.ஜ.க செயல்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொய் பரப்புரை செய்கின்றது. இது பொய் பரப்புரை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை அம்மாநில முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளித்துள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். பொறுப்புள்ள கட்சித் தலைவர் தவறாக பேசியுள்ளது வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க கட்சி பொய் புரட்டை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. பொய்யை மூலதனமாக கொண்டு செயல்படும் பா.ஜ.கவிற்கு தமிழக புதுச்சேரி மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், "ஆளுநர் மாளிகையில் மக்கள் குறை கேட்பு கூட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் இன்னும் ஆளுநர்களும் துணை நிலை ஆளுநர்களும் திருந்தவில்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் ஆளுநர்கள் தலையிடவோ தடை போடவோ கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் அங்கு மக்கள் குறை கேட்பு கூட்டத்தை நடத்த முடியுமா என சவால் விட்டேன் அதற்கு பதில் இல்லை .ஆனால் தெம்பு திராணி இல்லாத புதுச்சேரி ஆட்சியில் தான் துணை நிலை ஆளுநர்கள் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த முடியும். தனது அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகின்றார் என்று பார்க்காமல் முதலமைச்சர் நாற்காலி மட்டும் போதும் என்பதற்காக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்படுகின்றார்.

 

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஒற்றுமையாக இருக்கின்றோம் என முதல்வர் ரங்கசாமி கூறுகின்றார். ஆனால் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 'பா.ஜ.க ஆட்சி மலரும்' என்கின்றார்கள். முரண்பட்ட கருத்தோடு புதுச்சேரி தேசிய ஜனநாயக ஆட்சி செயல்படுகின்றது. மேலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க ஆட்சி அமைக்கப் போகின்றதா என்பதை முதல்வர் ரங்கசாமி தான் விளக்க வேண்டும். விதிமுறைகளை மீறி புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அனைவருக்கும் அதை சமமாக பிரித்துக் கொடுத்து லஞ்சத்தை பிரித்துக் கொடுப்பதிலும் முதல்வர் ரங்கசாமி ஜனநாயகத்தை காப்பாற்றி வருகின்றார்." என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதுவே ஆட்சி கவிழ்ப்புக்கு வித்திடும்' - நாராயண சாமி கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.

'அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள கருத்தாவது, 'ஒரு அரசியல் கட்சிக்கு நிதி கொடுப்பவர்கள் அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அந்த அரசியல் கட்சியினுடைய அனுதாபிகள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த அரசியல் கட்சிக்கு நிர்ப்பந்தம் காரணமாக அல்லது சலுகைகள் பெறுவதற்காக தேர்தல் நிதி கொடுக்கலாம். அதனால் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பணத்தை வைத்து ஆளுங்கட்சியானது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்வதற்கு இது வித்திடுவதாக அமையும். அதற்காகத்தான் உச்சநீதிமன்றம் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நன்கொடை என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதை வரவேற்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.