Skip to main content

''இது முதல்முறை கிடையாது; இதற்காகத்தான் ஈஷாவையே அவர் நடத்துகிறார்''-துரை வைகோ பேட்டி

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

 'This is not the first time in Isha' - Durai Vaiko interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் துரை வைகோ பேசுகையில், ''தமிழக ஆளுநரை பொறுத்தவரை அவர் தமிழக ஆளுநராக செயல்படாமல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வாறு செயல்படுவது மட்டுமின்றி சனாதன சிந்தனைகளை வளர்க்க செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நாட்டில் நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல முக்கியமான தீர்மானங்கள் ஒப்புதல் கொடுக்கப்படாமல் காத்திருக்கிறது. மக்களுக்கு தேவையான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்காமல் ஆளுநர் இந்த மாதிரி தமிழகம் என்று சொல்ல வேண்டும், திராவிடம் தமிழ்நாட்டை பாழ்படுத்துகிறது என சித்தாந்த ரீதியாக அரசியல் கட்சித் தலைவர்போல் பேசிக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆளுநர் என்பவர் பொதுவானவர். எந்த இயக்கம், எந்த சித்தாந்தம் என எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் நலத்திற்காக செயல்படக்கூட வேண்டியவர். அப்படிப்பட்டதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு சுயநல நோக்கத்தோடு அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது கண்டனத்திற்குரியது'' என்றார்.

 

அப்போது செய்தியாளர் ஒருவர் கோவை ஈஷா மையத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரை வைகோ, ''ஈஷாவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும். அந்த ஈஷா மையத்தை பற்றி எனக்குத் தெரிந்தமட்டில் வனவிலங்கு சட்டங்கள் பலவற்றை புறம்பாக செயல்பட்டுதான் அந்த மையத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் வழிபாட்டுத்தலமாக பார்க்கவில்லை. எவ்வளவோ சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த மாதிரி இடத்தில் போய் மக்கள் வழிபடலாம். ஆனால் அவர் தன்னுடைய சுயநோக்கத்திற்காக அந்த மையத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். அதில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற சில நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க மதத்தை உள்ளே கொண்டு வந்துள்ளார். ஈஷா மையத்தை பொறுத்தவரை இது முதல் சர்ச்சை கிடையாது. இதற்கு முன் அங்கு பல சர்ச்சைகள் நடந்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான பல விஷயங்கள் அந்த மையத்தில் நடந்திருக்கிறது. அதற்கு போதிய நீதி விசாரணை வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும், வைகோவின் கருத்தும்'' என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.