அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பில் இல்லை: ஜெ.அன்பழகன்

J Anbazhagan

அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பில் இல்லை என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மு.க.அழகிரி இன்று காலை தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

என் தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான அனைத்து விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம் என் பக்கம் உள்ளனர் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை என கூறினார்.

இது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறியதாவது,

திமுக தலைவர் கலைஞரின் மறைவில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அழகிரி கட்சியில் இல்லாததால் அவரது கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை. அழகிரி கட்சியில் இல்லாதது கலைஞரின் எடுத்த முடிவு; இப்போது இருப்பவர்கள் அல்ல என அவர் கூறியுள்ளார்.

j anbazhagan mk alagiri mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe