Skip to main content

கண்டுகொள்ளாத அதிமுக -  கடுப்பில் தேமுதிக !

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பா.ம.க ,பா.ஜ.க, தே.மு.தி.க , த.மா.கா , பு.த.க , மற்றும்  சில அரசியல் கட்சியுடனும்  கூட்டணி வைத்து  இந்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது . இந்த நிலையில் வட சென்னையில் தேமுதிக சார்பாக அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார் .இவரது சொந்த மாவட்டம் சேலம் என்பதால் இந்த தொகுதியை பற்றிய கள நிலவரம் என்ன என்று இன்று வரை இவரால் கணிக்க முடியவில்லை .இதனால் இவர் முழுக்க முழுக்க கூட்டணி கட்சிகளை நம்பியே இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் . 
 

mohanraj



வட சென்னையில்  தேமுதிகவுக்கு வாக்கு வங்கி மிகவும் குறைவு என்பதால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை எப்படியும் பெற வேண்டும் என்ற முனைப்பில் கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கிறார் . இந்த தொகுதிக்கு உட்பட்ட சட்ட மன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ஜெயக்குமார் அவரது மகன் போட்டியிடும் தென் சென்னை பகுதியை  அதிகமாக கவனித்து வருவதால் இந்த தொகுதியை அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்ற பேச்சும் வந்து கொண்டிருக்கிறது . இதனால் தேமுதிக நிர்வாகிகள் கொஞ்சம் கவலையில் உள்ளனர் . அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தீவிரமாக இங்கு பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் .இந்த நிலையில் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடுவது என்று  தெரியாமல் தேமுதிக வேட்பாளர் மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியே நீடித்தால் இந்த தொகுதியில் தேமுதிக வெற்றி பெருமா என்ற கேள்வியும் எழுகின்றது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.