Skip to main content

“தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை” - அண்ணாமலை

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

"No desire to contest elections" Annamalai

 

“2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை” எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநரிடம் தெளிவாக சில விஷயங்களை சொல்லி இருந்தோம். 2021-2022, 2022-2023 இந்த இரண்டு வருடங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மது விற்பனை 22% உயர்ந்துள்ளது. போன வருடம் 36 ஆயிரம் கோடி இந்த வருடம் 44 ஆயிரம் கோடி. இந்தியாவில் எங்கும் 22% உயரவில்லை. கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதும் உயர்ந்துள்ளது. 

 

கர்நாடகத் தேர்தலை பொறுத்தவரை மக்களின் மனநிலை ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுகிறது. 1985க்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு சலிப்புத் தன்மை வருகிறது. 38 ஆண்டுகளாக கர்நாடகத்தில் ஆளும் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. இம்முறை எங்கள் ஆசை அதை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் இம்முறை அது நடக்கவில்லை. இன்னொன்று காங்கிரஸ் அறிவித்த இலவச திட்டங்கள். 5 இலவச திட்டங்களை அறிவித்தார்கள். நேற்று சித்தராமையா அந்த இலவசத்தில் 3 மாற்றங்களை கொண்டு வந்தார். ஏழைகளிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. புழக்கத்தில் இல்லை. அதை வைத்திருப்பவர்கள் பதுக்கி வைத்துள்ளார்கள். லஞ்சம் வாங்கியவர்கள். 

 

எனக்கு 2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட கட்சியில் திறமையான தலைவர்கள் உள்ளார்கள். அவர்களை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எனது பணி. கட்சியின் தலைவராக நான் டெல்லிக்கும் தெரிவித்துள்ளேன். 2024 தேர்தலில் தொண்டனாக பணி செய்ய விரும்புகிறேன். தமிழகத்தை விட்டு வெளியே செல்ல மனது இல்லை. இந்த மண்ணில் அரசியல் செய்ய விருப்பப்படுகிறேன். டெல்லிக்கு செல்ல விருப்பம் இல்லை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.