டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுமான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டி கொடுக்க சென்றனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார் அவர்களை தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.
அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசார் இருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதன்பின் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் தங்கதமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.
இந்தநிலையில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும், மிரட்டியதாகவும் கூறி தங்கதமிழ்ச்செல்வன் மீதும், வெற்றிவேல் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது... நான் தற்போது என்னுடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள என்.டி.பட்டியில்தான் இருக்கிறேன். இன்று மாலையில் கூட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு, அம்மாவின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 1350பேருக்கு வேட்டி, சேலை, குக்கர், கிரிக்கெட் பேட் மற்றும் பல பொருட்களை வழங்க இருக்கிறேனே தவிர என்னைத் தேடி எந்த படையும் வரவில்லை நான் இங்குதான் இருக்கிறேன்.
முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறினால் அது உண்மையா? இல்லையா? என்று விசாரணை நடத்துங்கள். அதுபற்றி மக்களிடம் கூறுங்கள். அதைவிட்டுட்டு நாங்கள் தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடாது என்றால் என்ன நியாயம்? நான் அம்மாவால் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர். அதுபோல் அம்மா ஆசியுடன் ஆண்டிப்பட்டி தொகுதியில் பல தடவை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன்.
தற்போது எனது தொகுதி மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். அப்படி இருக்கும்போது என்னை தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடாது என்று சொல்ல அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. தலைமைச் செயலகம் எல்லோருக்கும் பொதுவான இடம். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் அப்படியிருக்கும் போது எங்களை மட்டும் வரக்கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? எங்களை வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை. அதுபோல் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் என்மீது வழக்குப் போடவில்லை. இருந்தாலும் அதை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோமே தவிர ஓடி ஒழியவெல்லாம் மாட்டோம் என்று கூறினார்.
என்னைத் தேடி எந்த படையும் வரவில்லை! என்மீது வழக்குப் பதிவும் இல்லை! தங்கதமிழ்ச்செல்வனின் பகீர் பேட்டி!!
சார்ந்த செய்திகள்
Next Story
'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?
இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.
Next Story
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)
இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.