Skip to main content

நான் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர்... ஓபிஎஸ்ஸிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய எடப்பாடி... இபிஎஸ் போட்ட அதிரடி திட்டம்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

தன் சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்த, சர்வதேச கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக அமைச்சர்கள் புடைசூழச் சென்ற எடப்பாடி, அமைச்சர்களுக்கு அங்கே பலவகை டிஷ்களோட அசைவ விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார். இந்த விருந்துக்கு என்ன காரணம் என்று விசாரித்த போது,  வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நான் தான் முதல்வருக்கான வேட்பாளர் என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் தற்போது இருந்தே அதற்கான பணியை செய்யுங்கள் என்று கூறியதாக சொல்கின்றனர். இது ஆரம்ப ட்ரீட் தான் என்று மந்திரிகளுக்கு உற்சாகமாக பேசி விருந்து கொடுத்திருக்கார் எடப்பாடி. சேலத்தில் இருந்து திரும்பிய அதே வேகத்தில் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தை 10-ந் தேதி தொடங்கிவிட்டார். அதற்கு அமைச்சர்கள், மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும்தான் முதலில் அழைப்பு சென்றுள்ளது. பிறகு, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். 
 

admk



மேலும் இந்த கூட்டத்திற்கான காரணம் பற்றி கேட்ட போது, நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து விரைவில் தேர்தல் நடத்தப்பட இருப்பதால், அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தக் கூட்டம் என்று கூறுகின்றனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் கட்சிப் பிரமுகர்களால் அனுபவித்த சிரமங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று  ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆவலோட இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மந்திரிகளும் மா.செ.க்களும், மாவட்டப் பிரச்சினைகளையும் குற்றச்சாட்டுகளையும் இந்தக் கூட்டத்தில் யாரும் எழுப்பக் கூடாது என்று அனைவரிடம் கூறியதாக சொல்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் வேட்பாளர்  திட்டத்தால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.