Advertisment

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ? டிடிவி தினகரன்

ttv dhinakaran

Advertisment

கடந்த வாரம் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரையில் இன்று ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ''நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?'' என குறிப்பிட்டுள்ளார்.

neet exam TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe