நவராத்திரி விழாவின் போது வீடுகளில் கொலு அமைக்கப்படுவது போலவே, தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமானகமலாலயத்தில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக பா.ஜ.க.வின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கொலு, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி அமைப்பும் கொலுவில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலு கண்காட்சியை மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

Advertisment