Skip to main content

நவநீதகிருஷ்ணின் பதவி பறிப்பு!-பிண்ணனி என்ன?

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Navaneethakrishnan's coup! What is the background?

 

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான நவநீதகிருஷ்ணனிடமிருந்து வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

 

Navaneethakrishnan's coup! What is the background?

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், மா.செ.க்கள் உள்ளிட்டவர்களுடன் எடப்பாடியும் பன்னீரும் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் துவங்கியதுமே தனது பேச்சைத் துவக்கிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "கட்சியின் கட்டுப்பாடுகளை மூத்த நிர்வாகிகளே மீறுவது வருத்தமாக இருக்கிறது. அதில் சமீபத்திய உதாரணம் நவநீதகிருஷ்ணன். நீட் தேர்வு குறித்து அமைச்சர் அமீத்சாவை சந்திக்க திமுக டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற எம்.பி.க்கள் குழுவில் நவநீதகிருஷ்ணண் போயிருக்கிறார். இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

 

ADMK

 

அம்மா (ஜெயலலிதா) இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருப்பாரா? சரிபோகட்டும். திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நவநீதகிருஷ்ணன், ராஜ்யசபாவில் கனிமொழிதான் எனக்கு வழிகாட்டி என கனிமொழியை புகழ்ந்து பேசியிருக்கிறார். இதையெல்லாம் சாதாரண நிர்வாகி செய்திருந்தால் கட்சி சும்மா இருக்குமா? நடவடிக்கை எடுத்திருப்போமா இல்லையா? திமுக நமக்கு எதிரி கட்சி. அந்த கட்சியினரோடு ஒட்டி உறவாடுபவர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் ஆவர். அதனால், அவர் எம்.பி.என்பதற்காக நடவடிக்கை எடுக்காமல் போனால் கட்சியில் கட்டுப்பாடு காணாமல் போகும்? இது கட்சிக்கு நல்லதல்ல. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோபமாக பேசினார் சண்முகம். இதனை பலரும் ஆமோதித்துள்ளனர்.

 

இதனையடுத்து கூட்டம் முடிந்ததும், நவநீதகிருஷ்ணணிடமிருந்த வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியை பறித்துள்ளனர். இதுதான் பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.