Skip to main content

தி.மு.க. மாணவர் அணி சார்பில் கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

National Conference on Education - Social Justice - Federal Philosophy on behalf of the DMK Student Team!

 

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தல் படி தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வரும், 2022 ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், கல்வி-சமூகநீதி-கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இம்மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பங்கேற்று கல்வி-சமூகநீதி-கூட்டாட்சி தத்துவம் காக்கின்ற இயக்கமாக மாணவர் அமைப்புகள் செயல்பட சிறப்புரை ஆற்றுகிறார். 

 

இம்மாநாடு இரண்டு நாட்கள், பல்வேறு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்திய அளவிலான பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மேனாள் நீதியரசர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி, கலந்துரையாடவுள்ளனர். 

 

“உங்களது கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு பணியாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயரிய நோக்கை சிதைக்க நினைக்கும் பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வியின் மீதான மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களையும், ஆணைகளையும் எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் முதற்படியாய் இம்மாநாடு அமைய உள்ளது.

 

இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரளா அரசின் தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் அய்.இளங்கோவன், தெலுங்கானாவைச் சேர்ந்த திராவிடச் சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் பி.ஸ்ரீகாந்த் ஸ்மித், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் பேராசிரியர் அனில் சத்கோபால், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், சமூகச் செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், சமூகச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி ஆகியோர் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.சந்தோஷ்குமார், முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, சமூகச் செயற்பாட்டாளர் கண்ணன் கோபிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த கன்னையா குமார், பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் சீமா சிஷ்டி, வங்காள தேசியவாதி கார்கா சாட்டர், எழுத்தாளர் மற்றும் பெரியாரிஸ்ட் திலீப் மண்டல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.

 

மாநாடு பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியது:


1) நீட், க்யூட் நுழைவு தேர்வுகளும் அதன் பின்னுள்ள மர்மங்களும் 
2) தேசிய கல்விக் கொள்கை: ஒரு பாசிச நோக்கம் 
3) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7ஆம் அட்டவணை ஒரு மறுபார்வையும், 
  கல்விக் கொள்கைகளில் மாநில சுயாட்சியும் 
4) இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் 
5) காவிமயமாகும் கல்வி நிறுவனங்கள் 
6) கூட்டாட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்களும்; கூட்டாட்சித் தத்துவத்தின் மீள்எழுச்சியும்         
7) சிதையும் ஜனநாயக நிறுவனங்கள் 
8) திராவிட இயக்கமும்; பெண்களின் முன்னேற்றமும் 
9) தமிழக மருத்துவ கட்டமைப்பும், மக்கள் நல மருத்துவமும் 
10) ‘திராவிட மாடல்’ வளர்ச்சி 
11) இந்திய ஒன்றியமும், கூட்டாட்சித் தத்துவமும்

 

தி.மு.க. மாணவர் அணியின் மூலம் நடத்தப்படுகின்ற இந்த மாநாட்டில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு, அனைத்து கட்சிகளின் மாணவர் அமைப்புகள், கட்சிகளை சாராத மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளிலிருந்தும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.