Skip to main content

கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவர்களையும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Published on 07/07/2020 | Edited on 08/07/2020
Narayanasamy

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

"தமிழ் மொழிக்காக பாடுபட்ட கோபதி என்கிற மன்னர் மன்னன் இறந்து விட்டார். சிறந்த தமிழறிஞர், சுதந்திர போராட்ட வீரர். பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் இறப்பு புதுச்சேரி மாநிலத்திற்கு பெரும் இழப்பு. மாநில அரசின் சார்பில் அவரது உடல் பாரதிதாசன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. பாரதிதாசன் மகன் உடலுக்கு மாநில அரசின் சார்பில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. 

 

புதுச்சேரியில் இன்று (07.07.2020) 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டினாலும் தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. நோயாளிகளே அரசிடம் நேரடியாக சிகிச்சை, உணவு ஆகியவை பெறும்போது, மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்படுகின்றது. அவர்களை பாராட்டுகின்றேன்.

 

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் ஆர்கானிக் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கி வருகின்றோம். சித்தா முறையில் (ஆயுஷ் நிறுவனம்) சிகிச்சை அளித்தால் கரோனா நோயாளிகள் சீக்கிரம் குணமடைந்து வருவதால், சித்த மருத்துவர்களையும் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 513 பேருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நோயாளிகள் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது ஜிப்மரில் ஆயிரம் பேருக்கும், அரசு மருத்துவமனையில் 400 பேருக்கும் பரிசோதனை செய்ய முடியும். தனியார் மருத்துவ கல்லூரிகளும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளோம். இதனால் பரிசோதனையை அதிகரிக்க முடியும். இதனால் நோயாளிகள் அதிகளவு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். அதனால் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.