Skip to main content

நாங்குநேரியில் குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன? கே.எஸ்.அழகிரி

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒட்டி, 'பெருந்தலைவரின் பொற்கால ஆட்சி' என்ற, தலைப்பில் கருத்தரங்கம் 15,07.2019 திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில், 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற, ஒரு வசனம் வரும். அதைப்போல, எனக்கும், ஒரு உண்மை தெரியாததால், இரவில் துாக்கம் வருவதில்லை. நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக, குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்று கூறினார்.


  Kumari Ananthan


திருச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு திருநாவுக்கரசர், உதயநிதி போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸ் விட்டுக் கொடுக்க தயார் என்றார். இந்த நிலையில் கே.எஸ். அழகிரி, குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்று கூறியுள்ளது திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், குமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நாங்குநேரி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் விரும்புகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியான லிஸ்ட்; மறுக்கும் காங்கிரஸ்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Released List; Congress refuses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது . திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் 21 மக்களவை தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

கடந்த முறை போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன் புதியதாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென்சென்னை, அரக்கோணம் ஆகிய 21  தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக பட்டியல் ஒன்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் போபண்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தொகுதிப் பங்கீடு தொடர்பான திமுக உடனான காங்கிரஸ் மேல்நிலை குழு பேச்சுவார்த்தை நடத்தியது திருப்திகரமாக இருந்ததாக கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளதோடு, திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Next Story

நாங்குநேரி படுகொலை; செய்தி வெளியிட்ட நிருபர் மீது வெடிகுண்டு வீச்சு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

beaten on journalist who reported on Nanguneri incident

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மெயின் சாலையில் தாலுகா அலுவலகம் அருகே கிருஷ்ணா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் வானமாமலை. இவர், அரசியல் கட்சியின் சேனல் ஒன்றின் நாங்குநேரிப் பகுதி நிருபராகவும் பணிபுரிந்து வருபவர்.

 

இன்று காலை (நவ-21) 9 மணியளவில் வழக்கம் போல் கடையைத் திறந்திருக்கிறார். அதுசமயம் திடீரென பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் தன் கைப்பையில் மறைத்து வைத்திருந்த உருண்டை போன்ற ஒரு பொருளை வீசியிருக்கிறார். கடையினுள்ளே விழுந்த அந்தப் பொருள் வெடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்ததாக ஒன்றை வீச அது கடைமுகப்பின் முன்னே உள்ளே போர்டில் தெரித்து டமார் என வெடித்திருக்கிறது. சப்தம் கேட்ட நிருபர் வானமாமலை பதற்றத்தில் வெளியே வர, வீசிய வாலிபர் தன்கையிலிருந்த கைப்பையை வீசிவிட்டுத் தப்பியிருக்கிறார். அதை நிருபர் வானமாமலை பார்த்த போதுதான் உள்ளேயிருப்பது வெடிக்காத குண்டு, கடையில் வீசியது வெடிகுண்டு என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

நிருபர் கடையில் வீசப்பட்ட வெடிகுண்டு சப்தம் அக்கம் பக்கம் பதற்றத்தை ஏற்படுத்த, வானமாமலையின் தகவலால் ஸ்பாட்டுக்கு வந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம் அலியின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தவர்கள். வெடிக்காத குண்டை கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துவிட்டு ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு தடுப்பு பிரிவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 

கடந்த ஆகஸ்ட்டின் போது நாங்குநேரியின் பள்ளி மாணவனை வீடு புகுந்து சகமாணவர்கள் வெட்டிய விவகாரம் அதிர்வையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதுசமயம் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் நடப்புகளை செய்தியாக வெளியிட்டிருக்கிறார் நிருபர் வானமாமலை. அது தொடர்பான மோட்டிவ் தான் அவரைக் குறிவைத்து வீசப்பட்ட வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

 

beaten on journalist who reported on Nanguneri incident

 

பதற்றத்திலிருந்த நிருபர் வானமாமலையைத் தொடர்புகொண்டு பேசும் போது, வழக்கமாக நான் காலை 9 மணிக்கு சற்று முன்பாக கடையைத் திறந்த சில நிமிடங்களில் பைக்கில் வந்தவன் ஒரு குண்டை கடைக்குள் வீசிய போது அது வெடிக்கவில்லை. என்னைக் குறிவைத்துத்தான் வீசியிருக்கிறான். நான் விலகிவிட்டதால் கடைக்குள் உள்ள பொருள் மீது பட்டு தெரித்திருக்கிறது. அடுத்தசில நொடிகளில் நான் எதிர்பாராத நேரத்தில் தொடர்ந்து அடுத்த குண்டை வீசினான், அது கடையின் போர்டில் பட்டு பலத்த சப்தத்துடன் வெடித்து சேதத்தை ஏற்படுத்தியது. பீதியில் நான் சுதாரித்து வெளியே ஓடிவந்த போது என்னைப் பார்த்தவன் பையைப் போட்டு விட்டு தப்பிவிட்டான். அவனை எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். பள்ளி ஒன்றில் படிப்பவன் என்றவர், பள்ளி மாணவன் அவனது சகோதரி வெட்டப்பட்ட போது நான் நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டதால், அப்போதே அந்தக் கும்பல் என்னை மிரட்டியது. அதுகுறித்து நான் போலீசில் புகாரும் செய்துள்ளேன். புகைந்து கொண்டிருக்கும் அந்தப் பகைமை தான் வெடிகுண்டு வீச்சுக்குக் காரணம். என்கிறார் வானமாமலை.

 

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ஆதம் அலியைத் தொடர்புகொண்டு பேசிய போது வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் ஒருவனை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். பிறகே காரணம் தெரியவரும் என்கிறார்.