Skip to main content

சூடு பிடித்துள்ள நாங்குநேரி தோ்தல் களத்தில் 23 வேட்பாளா்கள் 

Published on 04/10/2019 | Edited on 04/10/2019
nanguneri



இடைத்தோ்தல் களமான நாங்குநேரி தொகுதியில் தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் தோ்தல் அலுவலகம் திறந்து தோ்தல் களத்தில் விறு விறுப்பை காட்டி வருகிறது. திமுக தோ்தல் பணிக்குழு, காங்கிரஸ் பணிக்குழு அதே போல் இஜைஞா் காங்கிரஸ் சார்பிலும்  தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


        

தொகுதியில் அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் இந்த தொகுதியை தமிழகத்தில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் அதோடு ஸ்டாலினும் விரையில் தமிழகத்தின் முதல்வராவா் என மடத்துபட்டி, பொன்னார்குடி, கலந்தநேரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரச்சாரத்தை வேகமெடுத்துள்ளார்.


 

இதேபோல் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 14 அமைச்சா்கள், 10 மாவட்ட செயலாளா்கள் மற்றும் எம்எல்ஏ க்கள் என பெரும் படையுடன் அதிமுக வேட்பாளா் நாராயணன் பிரச்சாரத்தை துவங்குகிறார்.


 

nanguneri



இந்தநிலையில் 23-ம் தேதி ஆரம்பித்த வேட்புமனு தாக்கலில் 46 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 1-ம் தேதி நடந்த பரிசீலனையில் 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாம்தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் முருகன் மனுவை வாபஸ் பெற்றதில் இறுதியாக 23 போ் களத்தில் மோதுகின்றனா். காங்கிரஸ் ரூபி மனோகரன், அதிமுக நாராயணன், நாம் தமிழா் ராஜநாராயணன் ஆகியோருக்கு அந்த கட்சி சின்னங்களை தவிர மற்ற 20 பேருக்கும் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதனையடுத்து நாங்குநேரி தோ்தல் களம் சூடு கிளப்பியுள்ளது. வருகிற 21-ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
heat exposure; Samiana pandal at polling centers

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுசேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு வசதி சரியான நிலையில் கதவு, ஜன்னல் மின்சார வசதி, ஃபேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர் மர நிழல், அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.  

இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச் சாவடிகளுக்கு சாமியான பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகு சாமியானா பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.