ADVERTISEMENT

நக்கீரன் செய்தி எதிரொலி... பத்திரப்பதிவு திறப்பு உத்தரவை திரும்ப பெற்ற தமிழக அரசு..! 

10:57 PM Mar 26, 2020 | rajavel

ADVERTISEMENT

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனோ வைரஸ் சிக்கலில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வந்தார் பிரதமர் மோடி. இந்தியா முழுவதும் அரசு அலுவலங்கள் இயங்காது என்று அறிவிப்பு வெளியான நிலையில் திடீர் என தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகள் மட்டும் வெள்ளிக்கிழமை முதல் திறக்க வேண்டும் என்று ரகசியமாக உத்தரவு பறந்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் கரோனா வைரஸ் பிரச்சனையில் எல்லோரும் தனித்திருக்கும் நிலையில் எங்களை மட்டும் இப்படி பண்ணலாமா என்று ஜனாதிபதி முதல் முதல்வரை புகார் மனுகள் அனுப்பப்பட்டன.




நக்கீரன் இணையதளத்தில் அவர்களின் இந்த குமுறலை நாம் வெளியிட்டு இருந்தோம். நக்கீரன் செய்தியின் எதிரொலி ஆளும் கட்சியின் தலைமை வரை சென்ற நிலையில், நாளை நபத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்படும் என்ற உத்தரவு திடீர் என்று திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரப்பதிவு ஊழியர்கள் நம்மிடம் மிகவும் நெருக்கடியான நேரத்தில் துரிதமாக செய்தி வெளியிட்டதன் விளைவே இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது என நக்கீரன் இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT