Skip to main content

போராட்டம்... வேட்பாளர் தடை... அதகளப்படும் நாங்குநேரி இடைத்தேர்தல்...

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருவதையொட்டி நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கென்று பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நேற்றே சென்னைக்குப் பயணமாகி விட்டனர்.
 

nanguneri

 

 

ஆனால், கருப்பு கொடி, கோரிக்கைப் போராட்டம், வேட்பாளரை உள்ளே விட அனுமதி மறுப்பு என அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்குநேரியின் இடைத்தேர்தல்.

4,8719 வாக்குகளைக் கொண்ட தொகுதியில் மூன்றாம் எண்ணிக்கையிலிருப்பவர்கள் 30770 வாக்குகளைக் கொண்ட தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் குலத்தினர், தொகுதிக்குட்பட்ட ஆயர்குளம், அரியகுளம், பாளையஞ்செட்டிகுளம் உள்ளிட்ட 65 கிராமங்களில் இருக்கின்றனர். அவர்களின் நீண்ட மாத கோரிக்கையான பட்டியலின மக்கள் பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கப்பட வேண்டும் என்றதை மத்திய, மாநில அரசுகள் ஏற்று அறிவிக்காமலிருப்பதை இந்த இடைத்தேர்தலில் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். நேற்று மாலை தொகுதியின் மூலக்கரைப்பட்டியிருக்கும் இந்தப் பிரிவினரின் பகுதிக்குள் வாக்குகள் சேகரிக்கப் போயிருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன். அது சமயம் அ.தி.மு.க.வினர் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர்கள் படங்களைப் போட்டு நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்துள்ளனர். ஏற்கனவே கருப்பு கொடி கட்டிப் போராட்டம் நடத்திய அம்மக்கள், “யாரைக் கேட்டு எங்கள் தலைவர்களின் படத்தைப் போட்டீர்கள். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வாக்கு கேட்டு உள்ளே வரவேண்டாம்”, என்று அமைச்சரை வழி மறித்துள்ளனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் தலையிட்டும் முடியாமல் போகவே, முடிவில், அமைச்சர் பின் வாங்க நேரிட்டுள்ளது. அதே போன்று பாளை யூனியனில் வருகிற சிவந்திபட்டி கிராமத்தின் முட்டுக்கல் பகுதி மக்கள் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணணை உள்ளே அனுமதிக்காமல் தடைபோட்டனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியோ அ.தி.மு.க.விற்கு ஆதரவில்லை என்று அறிவித்து விட்டார். ஆனால் இலைத்தரப்போ, விவகாரங்கள், எதிர்ப்புக்களைச் சமாளிப்பதற்கு வைட்டமின் ”ப”வை ஆயுதமாக்க முனைந்திருக்கிறது.

அதே சமயம் காங்கரசின் வேட்பாளரான ரூபி மனோகரன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் இலக்காகதவர் என்றாலும் வாக்கு சேகரிப்பின் போது உடன் செல்லும் தொகுதியின் எக்ஸ் எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரால் விவகாரங்கள் ஒரு சில இடங்களில் தலை தூக்கியுள்ளன. தொகுதிக்குட்பட்ட நாங்குநேரியின் மறுகால்குறிச்சிக் கிராமத்திற்குள் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் ரூபிமனோகரனுடன் வசந்தகுமார் போயிருக்கிறார். அவரைப் பார்த்து டென்ஷனான கிராமமக்கள்.
 

nanguneri

 

 

‘நீங்க ஒங்க இஷ்டத்துக்கு எம்.பி.யாவுவீக. யாரைக் கேட்டு எம்.எல்.ஏ. பதவியை விட்டீக’ என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். பின்னர் அது சமாளிக்கப்பட்டது. தற்போது வசந்தகுமார் தவிர்க்கப்படும் நபராகி விட்டார்.

தேர்தல் பணிகளில் காங்கிரசின் பங்கு குறைவாக இருந்தாலும் அதனை ஈடுகட்டும் வகையில் தொகுதியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையிலான பெரிய ட்ரூப் தொகுதி முழுக்குப் பரவி நிற்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கூட்டணியிரை உள்ளடக்கிய பூத்கமிட்டி அமைத்தது போன்று வார்டுகளில் வாக்கு சேகரிக்கும் கமிட்டியும் அமைத்து ஸ்கெட்ச் போட்டு பணியை மேற்கொள்ளும் இந்தச் செயல்பாடு கைக்குப் பக்கபலமான ஆயுதம். போதாக்குறைக்கு கடந்த மூன்று நாட்களாக ஊராட்சித் திண்ணைக் கூட்டம், தேர்தல் பிரச்சாரம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தீவிரச் செயல்பாடுகள் காங்கிரஸ் தரப்புகளே மலைக்கிற விஷயம் மட்டுமல்ல, களத்தில் நிற்பது காங்கிரசல்ல தி.மு.க. என்ற உணர்வுகளே எதிரொலிக்கின்றன.

போராட்டம், புறக்கணிப்பு, தடை. வாக்கு சேகரிப்பு என்று கலகலக்கிறது நாங்குநேரி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.