Skip to main content

“அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்..” - திமுகவினர் குற்றச்சாட்டு

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

nagappattinam amma hotel issue dmk condemn o s manian

 

"சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்தது, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுப்பது, முன்னாள் அமைச்சர்களைக் கலந்தாலோசிப்பது என ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பதால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம்" என தீக்குளிக்க மண்ணெண்ணெய்க் கேனுடன் மூன்று பெண்கள் வந்தது நாகை மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியது. 

 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தை அமுதசுரபி மகளிர் சுய உதவிக்குழுவினரே நடத்திவருகின்றனர்.  நகராட்சி மூலம் 9 பேரும், மகளிர் சுய உதவிக்குழுவினர் 9 பேரும் என மொத்தம் 18 பேர் பணியாற்றிவந்தனர். அவர்களில் வெற்றிச்செல்வி, தமிழ்செல்வி, கமலா ஆகிய 3 பேரும் எந்தவித புகாரும் இல்லாமல் நேற்று (26.05.2021) திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும்தான் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளனர்.

 

இதுகுறித்து அந்த மூன்று பெண்களும் கூறுகையில், "நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பணிநீக்கம் செய்துள்ளனர். ஆனால், நாங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல்தான் பணியாற்றினோம். எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இல்லை எனில் இங்கேயே தீக்குளிப்போம்" என்றனர்.

 

இதனை சாதகமாக்கிக் கொண்ட அதிமுகவினர் களத்தில் இறங்கி தாசில்தார் ரமாதேவியிடம் மூன்று பேருக்கும் உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் என மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், ஒருபடி மேலே சென்று அம்மா உணவகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கும் மீண்டும் பணி வழங்காவிட்டால் வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

 

nagappattinam amma hotel issue dmk condemn o s manian

 

வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், "அம்மா உணவகம் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் நடத்தப்படுகிறது. அவர்களை நகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்யவில்லை. அவ்வப்போது ஊழியர்களை அவர்களே மாற்றிக்கொள்வார்கள். 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து எங்களுக்கு எவ்விதப் புகாரும் வரவில்லை. இது தொடர்பாக இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.

 

“அந்த ஊழியர்களுக்குள் என்ன பிரச்சினையோ, அவர்களுக்குள் நீக்கிக்கொண்டுள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தை அவர்களே பேசி முடித்துக்கொள்வார்கள். இதில் அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்” என்கிறார்கள் திமுகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.