ADVERTISEMENT

ரஜினி பற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறிய கருத்து... கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்!

03:33 PM Jan 24, 2020 | Anonymous (not verified)

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினி குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில், தம்பி படத்துல மாதவன் வில்லனை பார்த்து ஒரு வசனம் வரும் நீ எந்த பக்கம் போனாலும் நான் அங்க வந்து நிப்பேன்னு அதுமாதிரி ரஜினி 234 தொகுதியிலும் நிக்கனும் அவர் வேட்பாளர்கள் திரும்பி பக்கம்லாம் நாம் தமிழர் கட்சி சிம்ம சொப்பனமா நிக்கனும் கொடுக்க போற மரண அடில ரஜினி அதோட கட்சியை களைக்கனும் என்று கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சியினரின் இந்த கருத்துக்கு பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கொடுத்து இருந்தார். அதில், சூப்பர். அடுத்த ஜோக் சொல்லு தம்பி. அதுக்காவது சிரிப்பு வருதான்னு பாப்போம் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT