Skip to main content

’என் நண்பர் ராஜபக்சே இலங்கை பிரதமரானார்’-சு.சாமி ட்விட்

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
r s

 

இலங்கை பிரதமராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.  ஆளும் கட்சி உடைந்ததால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

 

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் குறித்து  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், 

’’எனது நண்பர் மகிந்த ராஜபக்ச இப்போது இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்சி நலனுக்காக மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” - பா.ஜ.க மூத்த தலைவர் தாக்கு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Senior BJP leader subramanian swamy says Modi should step down for the good of the party

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரங்களை வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.க.வின் கூற்றை காயப்படுத்தும் பெரிய ஊழலாக மாறியதால் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜ.கவின் நலனுக்காக மோடி பதவி விலக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

“படிக்காத பிரதமரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? - பா.ஜ.க மூத்த தலைவர்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
subramaniyan swamy says What else do you expect from a prime minister who does not study economics?

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன் தினம் (31-01-24) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் என்னை தொடர்பு கொண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்த என் கருத்தை கேட்டார்.

அப்போது நான் அவரிடம், ‘பொருளாதாரத்தைப் பற்றி படிக்காத பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். மேலும் அவரிடம், பட்ஜெட்டில் உள்ள குறிக்கோள்கள், முக்கியத்துவங்கள், பொருளாதார உத்தி, சாத்தியங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட சொன்னேன். அப்போது அவர் பாராட்டி சிரித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.